அறிவியல் திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் மலேசியாவிற்கு சுற்றுப்பயணம்

அறிவியல் திறன் சார்ந்த போட்டியில் வெற்றி பெற்ற சென்னை திருவொற்றியூர் மாநகராட்சி நடுநிலைபள்ளி மாணவிகள் இருவர் மலேசியாவிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

Update: 2018-09-05 05:20 GMT
* திருவொற்றியூரை சேர்ந்த தமிழரசி, ஷாலினி இருவரும் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8 வகுப்பு படித்து வருகின்றனர். 

* இங்கு தனியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட அறிவியல் திறன் போட்டியில் மாணவிகள் இருவரும் வெற்றி பெற்றனர். இதனையடுத்து அவர்கள் 7 நாள் மலேசியாவுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். 

* அங்கு கோலாலம்பூர், மலாக்கா உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்தாக அவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்