எல்லையம்மன் கோயிலில் 50 அடி செடில் மரத்தில் ஏறி சுற்றிய பூசாரி

காரைக்கால் அருகே எல்லையம்மன் கோயிலின் செடில் உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது.

Update: 2018-08-30 11:44 GMT
காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியில் உள்ள எல்லையம்மன் கோயிலின் செடில் உற்சவம் கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் வீதி உலா வந்து எல்லையம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, செடில் உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடந்தது. 50 அடி உயர செடில் மரத்தில் ஏறிய பூசாரி, அதில் தொங்கியபடி, 3 முறை சுற்றி வலம் வந்தார். அப்போது, அம்மனிடம் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழத்தை பக்தர்கள் மீது வீசி எறிந்தார். பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி எலுமிச்சை பழத்தை பிரசாதமாக பெற்றுக் கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்