வெல்லம் விலை அதிகரிப்பு : கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி

வெல்லம் விலை அதிகரித்துள்ளதால், சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2018-08-30 07:26 GMT
வெல்லம் விலை அதிகரித்துள்ளதால், சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடையாம்பட்டி, வெள்ளாளப்பட்டி, டேனிஷ்பேட்டை என ஓமலூரை சுற்றியுள்ள பகுதியில் தயாரிக்கப்படும் வெல்லம், சேலத்தில் உள்ள வெல்லமண்டியில் விற்பனை செய்யப்பட்டு பல ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ வெல்லம், தற்போது, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்