எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பங்கேற்பு

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-08-30 06:08 GMT
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் ஊற்றப்பட்டு, பின்னர் விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. முதலமைச்சர் விழாவில் பங்கேற்றத்தை அடுத்து, அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்