கௌரவ விரிவுரையாளர்கள் விரைவில் பணி நிரந்தரம்: பெயர் பட்டியலை கோரும் கல்லூரி கல்வி இயக்குனரகம்
அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக, பெயர் பட்டியல் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி கல்வி இயக்குநர் சாருமதி, அரசு கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அவசரம் என்பதால் வருகிற 31ஆம் தேதிக்குள் பெயர் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக மானியக் குழு வகுத்துள்ள விதிமுறைப்படி தகுதி வாய்ந்த விரிவுரையாளர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. 3 ஆயிரம் பேரில் ஆயிரத்து 400 பேர் வரை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என உயர்க்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.