பழுது காரணமாக பாதி வழியில் நின்ற ஊட்டி மலை ரயில்

ஊட்டி மலை ரயில் பழுது காரணமாக பாதி வழியில் நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.

Update: 2018-08-24 04:10 GMT
ஊட்டி மலை ரயில் பழுது காரணமாக பாதி வழியில் நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். நேற்று காலை 60 பயணிகளுடன் சென்ற டீசல் எஞ்ஜின் மலை ரயில் அருவங்காடு பகுதியில் எஞ்சின் பழுதானதால்  பாதி வழியில் நின்றது. உடனடியாக, ரயில்வே ஊழியர்கள் பழுதை சரி செய்ய முடியாததால், குன்னுார் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் மாற்று எஞ்ஜின் வரவழைக்கப்பட்டு பழுதாகி நின்ற ரயிலில் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதனையடுத்து 2 மணி நேர தாமதத்திறகு பிறகு ரயில் குன்னுார் சென்றடைந்தது.
Tags:    

மேலும் செய்திகள்