கருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை - நடிகை ராதிகா சரத்குமார்
திமுக தலைவர் கருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு சென்ற ராதிகா, திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரது மனதிலும் தமிழர் என் உணர்வை ஆழமாக விதைத்தவர் கருணாநிதி எனவும் கூறினார்.