இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் - ராமேஸ்வரம் மீனவர்கள்

நெடுந்தீவுக்கு தென்கிழக்கே நான்கு நாட்டுப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றது. இதனையடுத்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என ராமேஸ்வரம் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.

Update: 2018-08-12 06:22 GMT
நெடுந்தீவுக்கு தென்கிழக்கே நான்கு நாட்டுப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றது. 

மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், வரும் 16 ஆம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதனையடுத்து மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மீனவர்களை உடனடியாக விடுவிப்பது மற்றும் இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மீனவர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்