கண்களைக் கட்டிக் கொண்டு செஸ் விளையாடும் மாணவன்....

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த 13 வயது மாணவன் கண்களைக் கட்டிக் கொண்டு செஸ் விளையாடி சாதனை படைத்து வருகிறான்

Update: 2018-08-10 14:33 GMT
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த சரவணன் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சுகந்தன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தன்னுடைய 7 வயதில் இருந்தே செஸ் விளையாட்டில் ஆர்வமாக உள்ள இவர், மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது கண்களை கட்டிக் கொண்டு செஸ் விளையாட்டை திறம்பட விளையாடி வருகிறார் சுகந்தன். இதுவரை 127 பேரிடம் கண்களை கட்டிக் கொண்டு விளையாடி சாதனை படைத்துள்ள  மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்தும் போதிய நிதி இல்லை என கூறப்படுகிறது. எனவே தனக்கு உரிய நிதி உதவி வழங்க வேண்டும் என மாணவன் சுகந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்