திருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக சிபிஐ சோதனை - 19 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் 6 சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 19 பேரை சிபிஐ போலீசார், அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Update: 2018-08-07 03:55 GMT
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் அதிகரித்திருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, சிபிஐ குழுவினர் சோதனை நடத்தினர்.2 வது நாளாக நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 8 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 
இந்நிலையில், 6 சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் குருவிகள் என அழைக்கப்படும் தங்க கடத்துவோர் 13 பேர் உள்ளிட்ட 19 பேரை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளனர்.மலேசியாவில் இருந்து அதிக அளவு தங்கக்கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.சோதனை நடப்பதை அறிந்த சில தங்க கடத்தல்காரர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து தப்பியுள்ளனர்.அவர்களின் பட்டியலை வாங்கி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்