பெற்றோரை மிரட்டி புதிய பைக் வாங்கிய மகன் - மினி டெம்போ மீது மோதி பலியான சோகம்

தற்கொலை செய்து கொள்வதாக பெற்றோரை மிரட்டி பைக் வாங்கிய மகன், விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Update: 2018-08-04 12:11 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜ். புதிய பைக் வாங்கி தரவில்லை என்றால் 'தற்கொலை செய்து கொள்வேன்' என்று மிரட்டியதால், அவரது பெற்றோர் கடன் வாங்கி வாகனத்தை வாங்கி கொடுத்துள்ளனர். புது வாகனம் வாங்கிய மகிழ்ச்சியில், கோகுல்ராஜ் அவரது நண்பர் கருணாமூர்த்தி என்பவரை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.அப்போது பனங்காடு என்ற இடத்தில் மினி டெம்போ மீது இவர்கள் சென்ற பைக் வேகமாக மோதியதில், தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். மகன் தவறான முடிவு எதையும் எடுக்க கூடாது என்று பயந்து பெற்றோர் வாங்கி கொடுத்த இருசக்கர வாகனமே அவனது உயிரை பறித்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்