காரில் வந்து ஆடுகளை திருடிய ஆசாமிகள்- துரத்தி சென்று காரை மடக்கி பிடித்த காவலர்கள்

உடுமலையில் பட்டப்பகலில் காரில் ஆடுகளை திருடிவிட்டு தப்ப முயன்றவர்களை தடுத்த காவலர் மீது காரை இடித்து தப்பியவர்களை துரத்தி சென்று போலீசார் பிடித்துள்ளனர்.

Update: 2018-08-03 12:36 GMT
தாராபுரம் பகுதியில் காரில் வந்த சிலர் ஆடுகளை திருடி காருக்குள் போடுவதை கண்ட அப்பகுதி மக்கள் பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் தப்பிவிட்டனர்.இதனையடுத்து காரின் எண்ணை காவல்துறைக்கு தகவல் அளித்தனர். 

இதனையடுத்து உடுமலை பழைய பேருந்து நிலைய சிக்னல் அருகே சம்பந்தப்பட்ட காரை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரகுபதி நிறுத்த முயன்றார்.ஆனால் காரில் வந்தவர்கள் காவலர் மீது காரை மோதிவிட்டு தப்பிவிட்டனர். 

இதில் காயமடைந்த  ரகுபதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு கோமங்கலம் என்ற இடத்தில் காரை மடக்கி பிடித்தனர். 

காரில் மதுபோதையில் இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கடத்திய 4 ஆடுகளில், இறந்த நிலையில் 3 ஆடுகளையும் உயிருடன் ஒரு ஆட்டையும் மீட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்