மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் : வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

நீலகிரியில் 12 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிராமங்களில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2018-07-29 08:40 GMT
நீலகிரியில் 12 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிராமங்களில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் சமவெளி பகுதிகளில் காட்டு யானைகள் படையெடுத்து வருகின்றன. இதனால் அவற்றை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து, காட்டு யானைகளுடன் புகைப்பட எடுக்க முயற்சிக்க வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனத்தை இயக்கவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்