"வேளாண்துறை துணை இயக்குனர் சங்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை"

வேளாண்மைத்துறை துணை இயக்குனர் சங்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ஆய்வில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

Update: 2018-07-27 05:50 GMT
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் துணை இயக்குனராக பணிபுரிபவர் சங்கர். அவரது அலுவலகத்தில் கடந்த 23 ந்தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் உள்ள சங்கரின் வீடு மற்றும் நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள விதை பண்ணையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது  2 மாடி வீடுகள்,  உறவினர் பெயரில் 17ஏக்கர் நிலம் உள்பட 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கான 57 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்து 50 சவரன் நகைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். சங்கர், விழுப்புரம் மார்க்கெட்  கமிட்டியில் பணிபுரிந்த போது பல லட்ச ரூபாய் கையாடல் செய்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்