12-ம் வகுப்பு மாணவன் பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில்12-ம் வகுப்பு மாணவன் பள்ளி மைதானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-07-22 13:58 GMT
செய்யாறை அடுத்த மாளிகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவரின் மகன் மதன்குமார் செய்யாறை அடுத்த அரசு ஆ​ண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  நேற்று பள்ளிக்கு சென்ற மாணவன் வீடு திரும்பாததால் பெற்றோர் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில் பள்ளி மைதானத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் மதன்குமார் பிணமாக தொங்கியுள்ளார். இது தொடர்பாக காவலாளி அளித்த புகாரை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார்,  மாணவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்