பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த மாணவி - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

பள்ளி வேனில் இருந்து தவறி விழுந்த மாணவி - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

Update: 2018-07-14 05:50 GMT
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தனியார் பள்ளி வேனில் இருந்து மாணவி ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்தார். செட்டியப்பனூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வேன் ஒன்று, 28 மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. கூட்டுச்சாலையில் வேன் திடீரென்று திரும்பிய போது, வாகனத்தின் கதவு திடீரென்று திறந்து 8 ஆம் வகுப்பு மாணவி தர்ஷினி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்