பிரான்ஸில் நடைபெற்ற படகுப்போட்டியில் தகுதி பெற்ற வீராங்கனை.. அமைச்சர் உதயநிதி வாழ்த்து

Update: 2024-04-27 02:09 GMT

தமிழ்நாட்டை சேர்ந்த படகுப்போட்டி வீராங்கனை நேத்ரா குமணன், இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார். பிரான்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச்சுற்று படகுப்போட்டியில், ஐந்தாவது இடத்தை பிடித்த நேத்ரா, ENP ஒதுக்கீடு மூலம் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீராங்கனையான நேத்ரா குமணன், 2வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெற்றி வாகை சூடவும் வாழ்த்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்