பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடர் - அரையிறுதியில் பி.வி.சிந்து தோல்வி

பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.

Update: 2021-10-31 10:52 GMT
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை சயாகா டகாஷியை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அவரிடம் 21-க்கு 18, 16-க்கு 21, 12-க்கு 21 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்