கொரோனா தாக்கம் - திட்டமிட்டபடி ஐபிஎல் நடக்குமா? - ஆலோசனை நடத்த பிசிசிஐ திட்டம் என தகவல்

கொரோனா அச்சுறுத்தலால், திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2020-03-09 10:45 GMT
கொரோனா அச்சுறுத்தலால், திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வருகிற 29ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகளுக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் உலகை அச்சுறுத்தும் கொரோனாவால் ஐ.பி.எல் போட்டி ஒத்தி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா தாக்கத்தால் ஏற்கனவே , டெல்லியில் நடைபெறவிருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்கு அதிகளவு வருகை தருவார்கள், அப்போது கொரோனா வைரஸ்  பரவ வாய்ப்புள்ளது. இதனால் விரைவில் பிசிசிஐ ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்