உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி : தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில்

தமிழக வீராங்கனை இளவெனில் வாலறிவன் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

Update: 2019-11-21 08:31 GMT
தமிழக வீராங்கனை இளவெனில் வாலறிவன் உலக கோப்பை துப்பாக்கி  சுடுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். சீனாவில் நடைபெற்ற இந்த போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் கலந்து கொண்ட இளவேனில் 250 புள்ளி 8 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தார். இந்த வெற்றியின் மூலம் அவர் உலக ஏர் ரைபிள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் இதே ஆண்டு பிரேசிலில் நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் அவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்