மாவட்ட அளவிலான தடகள போட்டி : போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
கரூரில் வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கினார்.
கரூரில் வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கினார். புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கபாடி, வாலிபால், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்ற அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.