ஆசிட் வீச்சுக்கு உள்ளான நபர்களுக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படவில்லை என காவல் ஆணையரிடம் புகார்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான நபர்களுக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படவில்லை என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-05-27 12:55 GMT
சென்னையை சேர்ந்த கருப்பசாமி வேல்முருகன் ஆகியோர் அளித்த புகார் மனுவில் தகராறு ஒன்றில் ஆசிட் வீச்சில் தங்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளனர். அப்போது சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 4 நாட்கள் மட்டுமே சிகிச்சை வழங்கப்பட்டதாக புகார் தெரிவித்தனர். இருவரும் காயங்களுடன் வந்து அரசு மருத்துவமனை மீது புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்