31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகத்திலும் கொரோனாவை தடுக்க வரும் 31-ஆம் தேதி வரையாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-03-22 19:59 GMT
தமிழகத்திலும் கொரோனாவை தடுக்க வரும் 31-ஆம் தேதி வரையாவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்  வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது குறித்து அரசு அறிவிப்பு வரும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுப்பதில் இரவும், பகலுமாக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் பணி போற்றத்தக்கது என்றும் அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்