காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்தவே ப.சிதம்பரம் கைது - கே.எஸ்.அழகிரி
ப.சிதம்பரத்தை கைதை கண்டித்து சென்னை சத்தியமூர்த்திபவனில், கண்டன கூட்டம் நடைபெற்றது.
ப.சிதம்பரத்தை கைதை கண்டித்து சென்னை சத்தியமூர்த்திபவனில், கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் மூ.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மற்றும் அதனுடன் கூட்டணி வைத்துள்ளவர்களை அச்சுறுத்தவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.