மாற்றி, மாற்றி பேசுகிறார் ராகுல்காந்தி - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு, பிரதமரானால், கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவேன் என்று ராகுல்காந்தி பேசி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

Update: 2019-04-12 23:56 GMT
சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு அரசு, வழங்கும் திட்டங்களை திமுக தடுத்து வருவதாக குற்றம் சாட்டினார். முதலமைச்சராக, இந்த அளவிற்கு தான் உயர காரணமே எடப்பாடி பகுதி மக்கள் தான் என்றும் கூறினார். திமுக காங்கிரஸ் கூட்டணி, தமிழகத்தை பாலைவனமாக்க நினைப்பதாகவும் முதலமைச்சர் குற்றம் சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்