பாஜகவால் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது - கே.எஸ் அழகிரி

பா.ஜ.க.வால் தமிழகத்தில் ஒருபோதும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-03 16:14 GMT
சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில வழக்கறிஞர்அணி கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ் அழகிரி இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பலமாக வீசும் சில புயல், திசை தெரியாமல் போய் விடும் என்பதுபோல்,  பா.ஜ.க.வால் தமிழகத்தில் ஒருபோதும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்