பாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட தாக்குதல் ஆறுதல் அளிக்கிறது - திருமாவளவன்
இரு நாடுகளுக்கிடையே போர் சூழலைக் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பாதுகாப்பிற்காக நடத்தப்பட்ட தாக்குதல் ஆறுதல் அளிப்பதாகவும் தெரிவித்தார். திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் தொய்வு எதுவும் ஏற்படவில்லை என்று அப்போது அவர் கூறினார்.