நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் : தே.மு.தி.க. சார்பில் விருப்ப மனு விநியோகம்
தேமுதிக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சி அறிவித்தது.
தேமுதிக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சி அறிவித்தது. இதையடுத்து சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகத்தை பிரேமலதா தொடங்கி வைத்தார். சுதிஷ் உள்ளிட்டோருக்கு விருப்ப மனுக்களை வழங்கினார். வரும் மார்ச் 6 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது.