உயர்மின் கோபுரம் தொடர்பான ஆலோசனை கூட்டம் : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்பு

உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளை போலீசார் மிரட்டுவதாக வைகோ குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2019-02-13 14:02 GMT
உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கும் விவசாயிகளை போலீசார் மிரட்டுவதாக வைகோ குற்றம்சாட்டி உள்ளார். திருப்பூரில் உயர்மின்கோபுரம் தொடர்பாக நடந்த விவசாயிகள் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனை கூட்டத்தில், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பங்கேற்றார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயர்மின் கோபுரங்கள்  அமைக்கப்பட்டதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.அ.தி.மு.க.வை சேர்ந்த விவசாயிகளும், உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிராக போராட முன் வர வேண்டும் என்றும் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்