அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

அதிமுகவில் விருப்ப மனு விநியோகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2019-02-04 06:05 GMT
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர், விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைத்தனர். முதல் விண்ணப்பத்தை முக்கூர் சுப்பிரமணியனும், இரண்டாவதாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும் விருப்ப மனுவை பெற்றுக் கொண்டனர். 










Tags:    

மேலும் செய்திகள்