"மேகதாது அணை வந்தால் தமிழகம் பாழாகிவிடும்" - அதிமுக எம்.பி. தம்பிதுரை

"திட்ட அறிக்கையை தயாரிக்க அனுமதி வழங்கியது ஏன்?"

Update: 2019-01-24 23:08 GMT
மேகதாதுவில் அணை வந்தால் தமிழகம் பாழாகிவிடும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணை கட்ட அனுமதி தரவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கூறிய மத்திய அரசு, எதற்காக திட்ட அறிக்கையை தயாரிக்க அனுமதி வழங்கியது என்றும் கேள்வி எழுப்பினார். தேர்தல் கூட்டணி தொடர்பாக ஜெயலலிதா வகுத்த நிலையில் தான் அதிமுக சென்று கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்