ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது ஏன்? - ஸ்டாலின், திமுக தலைவர்

ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது ஏன்? - ஸ்டாலின், திமுக தலைவர்

Update: 2019-01-20 09:07 GMT
கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ராகுல்காந்தியை
பிரதமர் வேட்பாளராக அறிவிக்காதது ஏன்?  என்று, திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை அருகே சோழிங்கநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். விழாவில் பேசிய அவர், தமிழக மக்களின்
உணர்வுகளின் பிரதிபலிப்பாகவே சென்னையில் 
நடைபெற்ற கூட்டத்தில்  ராகுல் காந்தியை பிரதமர் 
வேட்பாளராக அறிவித்ததாக குறிப்பிட்டார்.
தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் அறையில் சிறப்பு யாகம் நடத்தியதாகவும், எதற்காக இந்த யாகம் நடத்தப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினார்.
கோடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கு வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்