எய்ம்ஸ் விவகாரம் : "அதிமுக மீது பொய் பிரசாரம் செய்தார்கள்" - ஆர்.பி.உதயகுமார்

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் அதிமுக மீது பொய் பிரசாரம் முன் வைப்பவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-18 12:46 GMT
எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் அதிமுக மீது பொய் பிரசாரம் முன் வைப்பவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த வில்லூர் கிராமத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு பேசிய அவர், பல ஆண்டுகளுக்குப் பின் சட்டரீதியில் போராட்டம் நடத்தி காவிரி பிரச்சனையில் வெற்றி கண்டிருப்பதாகவும் கூறினார். தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக மேலிடம் முடிவு செய்யும் எனவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்