மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சரை தாக்கிய நபர் கைது...

அமைச்சரின் ஆதரவாளர்கள் பதிலுக்கு தாக்கியதால் பரபரப்பு.

Update: 2018-12-08 23:22 GMT
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள ஆம்பர்நாத் என்ற இடத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவை ஒரு நபர் தாக்கியதால் பரபரப்பான நிலை உருவானது. அந்த நபரை அங்கிருந்தவர்கள் கடுமையாக தாக்கினார்கள். இதில் படுகாயமடைந்த அந்த நபரை போலீசார் கைது செய்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மத்திய அமைச்சரை தாக்கிய நபர் பிரவிண் கோசவை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக தானே போலீசார் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்