அனுமார் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் - தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் விளக்கம்

அனுமார் பழங்குடியினத்தை சேர்ந்தவர் என தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-30 08:45 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் ஆதித்யநாத், அனுமார் தலித் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேசிய பழங்குடியின ஆணைய தலைவர் விளக்கம் அளித்துள்ளார். இந்து கடவுள்களுக்கு சாதி பெயரை கூறும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்களுக்கு இந்து மதம் குறித்து பாடம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாக அலகாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கராச்சாரியார் சுவாமி சொருபானந்தா சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்