" நாட்டு மக்களை அவமதித்து விட்டார் பிரதமர் " - ராகுல்காந்தி கடும் தாக்கு

சிபிஐ அதிகாரிகளை நீக்கம் செய்தது நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-25 13:30 GMT
சிபிஐ அதிகாரிகளை நீக்கம் செய்தது நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐ இயக்குனர் நியமனம் மற்றும் நீக்கம் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூவர் குழுவால் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்றார். எனவே, சிபிஐ விவகாரத்தில், பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கை மிகவும் தவறு என்று அவர் குற்றஞ்சாட்டினார். மக்களின் வரிப்பணம் அனில் அம்பானிக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக
கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, ராகுல் காந்தி விமர்சித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்