சாப்பாடு தட்டுகளை கழுவிய சோனியா, ராகுல் காந்தி...

காந்தி ஜெயந்தியையொட்டி, சேவா கிராம் ஆசிரமத்துக்கு சென்ற ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி அங்குள்ள சேவா கிராமில் உணவு சாப்பிட்டனர்.

Update: 2018-10-02 22:13 GMT
காந்தி ஜெயந்தியையொட்டி, மகாராஷ்டிர மாநிலம் வார்தா நகருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இருவரும் சென்றிருந்தனர். அங்குள்ள சேவா கிராம் ஆசிரமத்துக்கு சென்ற அவர்கள், அங்கு மதிய உணவு சாப்பிட்டனர். பின்னர், தாங்கள் சாப்பிட்ட பாத்திரங்களை, சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் தாங்களே சுத்தம் செய்து ஆசிரமத்தில் வைத்தனர்.

சாலையில் நடந்து சென்ற ராகுல்காந்தி

மகாராஷ்டிர மாநிலத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பின்னர், அங்குள்ள வார்தா நகர் சாலையில் நடந்து சென்று  பொதுமக்களை ராகுல் சந்தித்தார். பின்னர், திறந்த வேனில் பயணித்தபடி, சாலையில் ஊர்வலமாக சென்றார். அவரை, வழி நெடுகிலும் மக்கள் வரவேற்றனர்.  
Tags:    

மேலும் செய்திகள்