"நாக்கு அழுகி விடும் என சொல்ல நினைத்தேன்" - சர்ச்சை பேச்சு குறித்து, துரைக்கண்ணு விளக்கம்

அதிமுக கண்டன கூட்டத்தில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு, வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-27 17:00 GMT
அதிமுக கண்டன  கூட்டத்தில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு, வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு வருத்தம் தெரிவித்துள்ளார். கபிஸ்தலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாக்கு அழுகி விடும் என சொல்ல நினைத்து, வாய் தவறி, நாக்கை அறுப்பேன் என பேசி விட்டதாக விளக்கம் அளித்தார். திட்டமிட்டு , யாரையும் குறிப்பிட்டு தாம் பேசவில்லை என்று துரைக்கண்ணு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்