ஜெயலலிதாவின் சட்ட வாரிசுகள் விவரங்களை தெரிவிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

சொத்து வரிக் கணக்கு தொடர்பான வழக்கில், ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு விவரங்களை தெரிவிக்குமாறு வருமான வரித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-11 03:37 GMT
* கடந்த 1997-98 ம் ஆண்டில் தனக்கு 4 கோடியே 67 லட்ச ரூபாய் அளவுக்கு  அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாக ஜெயலலிதா கணக்கு தாக்கல் செய்திருந்தார். ஆனால், ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர், 3 கோடியே 83 லட்ச ரூபாய் அளவுக்கு தங்கம், வெள்ளி நகைகள் இருப்பதாக அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில், மீண்டும் மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதை, வருமான வரித் துறையின் தீர்ப்பாயம் ரத்து செய்தது. 

* அதைத் தொடர்ந்து, வருமான வரித்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் உள்ளனரா, அவர் உயில் எழுதி வைத்திருக்கிறாரா என்பது குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு வருமான வரித் துறைக்கு  உத்தரவிட்டு, விசாரணையை வரும் 26 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்