"வாஜ்பாய் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் அதுவே உண்மையான அஞ்சலி " - பிரதமர் மோடி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுகளை நிறைவேற்றுவதே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-20 14:40 GMT
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டெல்லியில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் 
ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும்,  வாஜ்பாய் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வாஜ்பாயின் வாழ்க்கை இந்திய மக்களுக்கானது என்றார். பல ஆண்டுகளாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்யாதவர், வாஜ்பாய் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.  

அணு ஆயுத நாடாக இந்தியா உருவெடுப்பதை உறுதி செய்த வாஜ்பாய், அழுத்தங்களுக்கு ஒருபோதும் தலைவணங்கியது இல்லை,என்னை போன்றே, பலரும் வாஜ்பாய் உடன் இணைந்து பணியாற்றி உள்ளனர். நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதே அவரது ஒரே கனவாக இருந்தது.அதனை நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றுவதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி ஆகும் எனவும் பிரதமர் மோடி கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்