அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது,நாடாளுமன்றத்தில் தவறான தகவல் அளித்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்திருந்தது.

Update: 2018-07-25 12:13 GMT
நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது,நாடாளுமன்றத்தில் தவறான தகவல் அளித்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்திருந்தது.மக்களவை இன்று கூடியதும், உரிமை மீறல் நோட்டீஸை நாடாளுமன்றத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.இதற்கு பதில் அளித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன்,இதனை பரிசீலித்து வருவதாகவும்,முடிவை அறிவிப்பேன் என்றார்.இதை காங்கிரஸ் எம்.பி.க்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அவையில் அமளி ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்