18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : எப்போது விசாரணை?

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு எப்போது விசாரணை என்பது நாளை பட்டியலிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2018-07-03 14:31 GMT
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதால், இந்த வழக்கு 3 வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.  நீதிபதி விமலா மாற்றப்பட்டு, நீதிபதி சத்தியநாராயணன்  விசாரணை நடத்துவார் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது. இதன்படி, இந்த வழக்கு நீதிபதி சத்தியநாராயணா முன்பு நாளை புதன்கிழமை, பட்டியலிடப்பட உள்ளது. இந்த வழக்கு எப்போது விசாரிக்கப்படும் என்பதை நாளை, நீதிபதி முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்