"முதலமைச்சர் பதவிக்கு கனவு காண்கிறார் ஸ்டாலின்" - ஓ.எஸ்.மணியன்
"18 எம்எல்ஏக்கள் நிலை- வருத்தம் அளிக்கிறது" - ஓ.எஸ்.மணியன்
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் தாய் கழகத்தில் இருந்து இருக்க வேண்டியவர்கள் என்றும், அவர்கள் மக்களுக்கு சேவை செய்ய முடியாமல் இருப்பது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகையில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், முதலமைச்சர் பதவியை எப்படியாவது எட்டி பிடித்துவிட வேண்டும் என்று ஸ்டாலின் கனவு காண்பதாகவும் அவர் கூறினார்.