ராகுல் - கமல் சந்திப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - திருமாவளவன்

பழங்குடியின மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Update: 2018-06-23 16:03 GMT
விழுப்புரம் மாவட்டம், ஆட்சியர் அலுவலகம் அருகே பழங்குடியின மாணவர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பிரபா கல்விமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, திருமாவளவன், நடிகர் கமல்ஹாசன், சோனியா மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றார். 



Tags:    

மேலும் செய்திகள்