"காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..." நாட்டையே திரும்ப வைத்த ராகுலின் வாக்குறுதி

Update: 2024-03-29 10:01 GMT

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அனைத்து அரசுத்துறைகளிலும் 50 சதவீத புதிய பணியிடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும் என ராகுல் காந்தி மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளார். அரசுத்துறையில் பத்தில் ஒரு இடத்தில் மட்டுமே பெண்கள் வேலை பார்ப்பதாக சுட்டிக்காட்டிய அவர், மக்கள்தொகையில் பெண்கள் 50 சதவீதம் உள்ள நிலையில், அரசு வேலையில் மட்டும் பங்களிப்பு குறைவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 50 சதவீதம் அரசுப் பதவிகளில் பெண்கள் இருந்தால், நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் பலத்தைத் தரும் என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்