கஞ்சா போதையில் இளைஞர்.. அதிரடி காட்டிய தமிழக போலீசார்

Update: 2024-02-28 14:24 GMT

கேரள அரசுப்பேருந்தில் கஞ்சா போதையில், சக பயணிகளுக்கு தொல்லை கொடுத்த நபரை, தமிழக போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கேரள அரசுப்பேருந்து ஒன்று மைசூரில் இருந்து கூடலூர் வழியாக கேரள மாநிலம் மலப்புரத்திற்கு சென்று கொண்டிருந்தது. இதில் பயணித்த கேரளாவை சேர்ந்த இளைஞர், கஞ்சா போதையில் நீண்டநேரமாக பயணிகளுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், பேருந்தானது கூடலூர் வரும் போது அங்கிருந்த காவல்துறையிடம், பேருந்து நடத்துநர் மற்றும் பயணிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, இளைஞரை பிடித்து வைத்துவிட்டு, கேரள அரசுப்பேருந்தை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்