"தேர்தல் நேரத்தில்.."கெஜ்ரிவால் ஜாமீன் - மம்தா ஓபன் டாக்

Update: 2024-05-10 13:40 GMT

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வசதியாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்சநீதிமன்றம் ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது, தற்போதைய தேர்தல் நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்