புதுச்சேரியில் எம்.எல்.ஏ அத்துமீறல்? அமைச்சரின் மனைவி புகார்

Update: 2024-04-20 12:17 GMT

புதுச்சேரியில் புதிய அமைச்சராக பதிவியேற்றவர் திருமுருகன். இவரின் மனைவியான சுர்ஜிதாவுக்கு காரைக்கால், மண்டபத்தூர் பகுதியில் சொந்தமாக நிலம் ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத்தின் திமுக எம்.எல்.ஏவான நிவேதா முருகன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், புதுப்பேட்டை சந்திரபாடி கிராமங்களுக்கிடையே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த பணியானது புதுச்சேரியின் எல்லைக்குள்ளும் அனுமதியின்றி வருவதாக கூறிய சுர்ஜிதா, தனக்கு சொந்தமான நிலத்திலும் சாலை அமைக்கப்படுவதாக கூறி கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகாரளித்தார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தமிழக அரசின் ஒப்பந்த ஊழியர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்