பா.ஜ.க. முன்னாள் எம்.பி பாதுகாப்பு வாகனம் மீது கல்வீச்சு - மகாராஷ்ட்ராவில் பரபரப்பு

Update: 2024-02-17 12:19 GMT

மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க. மூத்த தலைவர் பாதுகாப்பு வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்ட்ர மாநிலம் ரத்னகிரி பகுதியில் உள்ள சிப்லுன் என்ற இடத்தில், பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான நிலேஷ் ராணேயின் பாதுகாப்பு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். சிவசேனா உத்தவ் தாக்கரே அணி ஆதரவாளர்களும், பா.ஜ.க.வினரும் கட்சி அலுவலகம் முன்பு மோதலில் ஈடுபட்டபோது, அந்த வழியாகச் சென்ற வாகனம் மீது கல்வீசப்பட்ட நிலையில், பொதுமக்கள் அச்சமடைந்தனர். மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்