சென்னையை போல பாண்டியிலும் - ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை.. - வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு

Update: 2023-09-03 09:30 GMT

விபத்துக்களை குறைக்கும் விதமாக போக்குவரத்து காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி நகர பகுதியில் அனைத்து வாகனங்களும் 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது என்றும், புறநகர் பகுதிகளில் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் வணிகமற்ற வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாயும், வணிக வாகனங்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டு வழக்குப்பதியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளர். ரேசில் ஈடுபட்டால் 5 ஆயிரம் அபராதத்துடன் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாக வாங்கப்பட்டுள்ள நவீன லேசர் வேக அளவீட்டு கருவிகள் மூலம் நாளை முதல் முக்கிய சாலைகளில் கண்காணிக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்